மின்னித் தீர்க்கிறது



மலர் விரிகிறது
     துயிலெழுகிறாய்
மணம் பரவுகிறது
     முகம் கழுவுகிறாய்?
பனி மறைகிறது
    து கில் திருத்துகிறாய்
கதிர் எழுகிறது
     கண்ணாடி பார்க்கிறாய்
குளிர் வழிகிறது
     குளித்து முடிக்கிறாய்
ஒளி தெறிக்கிறது
     ஒப்பனை செய்கிறாய்
குயில் இசைக்கிறது - யாருக்கோ 
     குட்மார்னிங் சொல்கிறாய்!


முகில் நகர்கிறது
    உடை உடுத்துகிறாய்
இலை உதிர்கிறது
    நகம் நறுக்குகிறாய் 
மரம் அசைகிறது
    நடை பயில்கிறாய்
தென்றல் தவழ்கிறது
    கூந்தல் உலர்த்துகிறாய்
மழை பெய்கிறது
    நகை புரிகிறாய்
இடி இடிக்கிறது
    இமை திறக்கிறாய்
மின்னித் தீர்க்கிறது
    விழி சுழற்றுகிறாய்
நிலவு ஒளிர்கிறது 
    நெற்றி துடைக்கிறாய்
மலை தெரிகிறது
    பெருமூச்செறிகிறாய்
உயிர் துடிக்கிறது
   எதிரில் வருகிறாய்









Comments

  1. இனிய கவிதை
    நிலவு ஒளிர்கிறது
    நெற்றி துடைக்கிறாய்

    ReplyDelete
  2. நல்ல கவிதை

    ReplyDelete
  3. உயிர் துடிக்கிறது
    எதிரில் வருகிறாய்
    nice lines

    ReplyDelete


  4. கவிதை அருகையாக உள்ளது! வாழத்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி