Posts

Showing posts from 2023

இப்படியுமா பேசுவது ...?

  இன்றைக்கும் தமிழ்நாட்டின் அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் மகாபலிபுரம் எனப்படும் மாமல்லபுரம் அன்று பெருந்திரளால் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது . குறிப்பிட்ட ஒரு துறையைச் சேர்ந்தவர்கள் மிக அதிகமாக வந்திருந்தனர். அன்று வந்திருந்த பெருங்கூட்டத்தில் இரண்டு குழுவினரின் உரையாடல்கள் நம்மை உற்றுக் கேட்க வைத்தன. முதலில் வந்த குழுவில் ஒருவர் தன்னுடன் வந்தவர்களுக்கு மாமல்லபுரத்தின் செறிவான வரலாற்றையும் , சிற்பச் சிறப்பையும் ,கலை நுணுக்கங்களையும் விரிவாக விவரித்தபடி வந்து கொண்டிருந்தார். அவரது ஆழமான அறிவும் , விளக்கும் விதமும் நம்மை வியப்பிலாழ்த்தின. சிறிது நேரத்தில் மற்றொரு குழுவின் உரையாடலைக் கேட்க நேர்ந்தது. மிக அலட்சியமாக , கேவலமான தொனியில் வரலாற்றையும் , தொன்மையையும் கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று தன்னுடன் வந்தவர்களுக்குத் தனது நகைச்சுவைத் திறனைக் காட்டுவதாக எண்ணிக் கொண்டு தனது அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவரது ஒவ்வொரு நான்சென்ஸ் காமென்டுகளும், உடன் வந்தவர்களின் சிரிப்பும் நாராசமாக இருந்தது. நமக்குப் பின்னால் வரும் மடையர்களுக்கு இதுவெல்லாம் தெரியவா போகிறது என்ற புல

மிடில் ஈஸ்ட் டெஸ்ஸெர்ட்ஸ்

  ஷவர்மா, அல்ஃபாம்,  குழிமந்தி வகையறாக்களை அடுத்து  மிடில் ஈஸ்ட் உணவு வகைகளான Kunafe, பக்லாவா மற்றும் Umm Ali  ஆகியவை  இப்பொழுது கோவையில்  ஹிட்டடித்துக் கொண்டிருக்கின்றன. கோவையில்  கேரளா க்ளப்புக்கு  அருகில் உள்ள‌ ஸ்வீட் ஸ்மித்  என்ற அரபிக் டெஸ்ஸர்ட்  கஃபேயில் சென்ற வாரம் சுவைத்த குனாஃபயின் சுவையும், மணமும் இன்னமும்  நிற்கிறது.  பெனாலிமிலும் , மஞ்சேஷ்வரிலும் , கோவையின் பெர்ஷியன் குரேஷியிலும் சீஸ் மற்றும் சாக்லேட் ஃப்ளேவர்கள்  மட்டுமே நமக்குக் கிடைத்தன. ஸ்வீட் ஸ்மித்தில் ஏகப்பட்ட வெரைட்டிகள் உண்டு.  இத்தாலியின் புகழ்பெற்ற  சாக்லெட்டான ஹேஸல் நட் சேர்த்த ஃபெரேரோ ரொஷே ஃப்ளேவரில் நாம்   சுவைத்த Kunafe திகட்ட வைக்கும் தித்திப்புடன்   அடர் பிரவுன் நிறத்தில் அட்டகாசமாக இருந்தது.  உதிர்த்த  சேமியா போல லேசாக மொறு மொறு என்று இருக்கும் Kunafa மீது  சுகர் சிரப்பைத்  தாராளமாக ஊற்றி ஊற வைத்தால் மொறுமொறுப்பு மறைந்து பதமாக மாறி இதமாகத் தொண்டைக்குள் இறங்குகிறது.  நம்மூர் பாசந்தியில் நிறைய நட்ஸ்களைத் தூவிச்  செய்தது போல்  இருக்கும் உம்ம் அலியை  இளஞ்சூடாகச் சாப்பிடுவது டிவைன்  டேஸ்ட். அழகான சிறிய வாணலி போ

நீரதிகாரம் - விகடனின் நெடுந்தொடர்

  122 வாரங்கள்....பேரியாற்றுடனேயே  வாழ்ந்தது போல இருக்கிறது. பேரியாற்றின் ஆவேசத்தையும் ,ஆங்காரத்தையும் ,அபரிமிதத்தையும் , மூர்க்கத்தையும் , பெருக்கையும் கூடவே இருந்து பார்த்து, அதிர்ந்து, வியந்து, பயந்து,மகிழ்ந்து நிறைந்தது போல இருக்கிறது. விகடனில் 122 வாரங்களாக வந்து கொண்டிருந்த முல்லைப் பெரியார் அணை உருவான வரலாற்றுத் தொடரான நீரதிகாரம் சென்ற வாரம் முற்றுப் பெற்றதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  அ. வெண்ணிலா அவர்களின் சொக்க வைக்கும் சொல்லாடல்களும் , நெகிழ வைக்கும் எழுத்து நடையும் வாசிப்போரை வசப்படுத்தி வைத்துக் கொள்கின்றன. ஒரு வரலாற்றுப் புதினம் என்றாலே பெருமளவு தரவுகள் தேவைப்படும். அத்தனையையும்  திரட்டுவதற்கு அவர் கொடுத்திருக்கும் உழைப்பை ஊகிக்க முடிகிறது. வெறுமனே தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் மட்டும் அடுக்காமல் அவற்றைத் தொகுத்துச் சுவைபடப் புதினமாக்கியதோடு மட்டுமின்றி 19 ஆம் நூற்றாண்டில் நம்மை வாழ வைத்தும் இருக்கிறார். தாது வருடப் பஞ்சத்தின் கோரத்தையும் ,மதுரை ராமநாதபுர மாவட்டங்களின் வறட்சியையும்  பதைக்கப் பதைக்கப் பதிவு செய்த வெண்ணிலா அதே நேரம் கேரளத்தின் அதிமழையையும், பெருவெ

பண்புத்தொகை- பண்புப்பெயர்ப் புணர்ச்சி - புணர்ச்சி விதிகள் - ஓர் எளிய விளக்கம்

  அருஞ்சுவை என்பதை எவ்வாறு பிரித்து எழுதுவது.... அதில் இருக்கும் இலக்கணம் என்னவென்று நண்பர் பரமசிவம் அவர்கள் கேட்டிருந்தார். அருமை + சுவை = அருஞ்சுவை அருமை என்பதை நாம் அனைவரும் மிகவும் நல்ல என்ற பொருளிலேயே பயன்படுத்துகிறோம். அரிய என்பதே அதன் முதன்மைப் பொருளாகும். அருமை + சுவை எப்படி அருஞ்சுவை ஆகிறது ...? அருஞ்சுவை என்பது ஒரு பண்புத்தொகை. முதலில் பண்புத்தொகை என்றால் என்னவென்று பார்க்கலாம். இரண்டு சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேர்வதைப் புணர்ச்சி என்கிறோம். அவற்றில் முதற்சொல் நிலை மொழி என்றும் இரண்டாம் சொல் வருமொழி என்றும் கூறப்படும். உண்மையில் இரண்டு சொற்கள் புணர்கையில் நிலைமொழியின் ஈற்றெழுத்தும் ( இறுதி எழுத்து) , வருமொழியின் முதலெழுத்தும்தான் புணர்கின்றன. எவ்வகைப் பொருளின் அடிப்படையில் இச்சொற்கள் பொருந்துகின்றன என்பதைக் கொண்டு வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என இருவகையாகப் பிரிக்கலாம். இரண்டு சொற்கள் இணையும் பொழுது அச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளான ஐ,ஆல்,கு,இன்,அது, கண் என்பவை தொக்கியோ( மறைந்து ) அல்லது விரிந்தோ (வெளிப்பட்டு) வந்தால் அது வேற்றுமைப் புணர்ச்சி. உருபுகள்

தேக்கடி என்றொரு தெவிட்டாத இன்பம்

  தேக்கடி  என்றதும்    அதன் உலகப் புகழ் பெற்ற போட்டிங் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அதையும் தாண்டி ஏகப்பட்ட ஆக்டிவிட்டீஸ் அங்கு உண்டு.  கார்டன் விசிட்டுகள்,  அருவிகள்,  வியூ பாயிண்ட்டுகள்,  ஆஃப் ரோடு ஜீப் சஃபாரி,  ரோஸ் கார்டன் ,யானை சவாரி,  களரி, கதக்களி, ட்ரைபல் டான்ஸ் லைவ் ஷோக்கள் நடக்கும் ஆர்ட்‌ தியேட்டர்கள், மிட் நைட் ட்ரெக்கிங்,  ஃபாரஸ்ட் ஸ்டே , ஃபுல் டே ட்ரெக்கிங் பேக்கேஜ் , 3 நாள் ட்ரெக்கிங் பேக்கேஜ்  என வெரைட்டியான, செமத்தியான ஆப்ஷன்கள் உண்டு. நைட் ட்ரெக்கிங்கில்  மாலை 7 -10, இரவு 10-1 , நள்ளிரவு 1-4  என மூன்று டைம் ஸ்லாட்டுகள் உண்டு.  நாம் நள்ளிரவு 1-4 ஸ்லாட்டை செலக்ட் செய்திருந்தோம் . கோவையிலிருந்து மாலை கிளம்பி இரவு பதினொரு மணிக்கெல்லாம் புக் செய்திருந்த காட்டேஜுக்கு வந்து சேர்ந்த பிறகு ஒன்றரை மணி நேரம் சின்னதொரு ரெஸ்ட் . நள்ளிரவு 12: 45 மணிக்கு தேக்கடியில் உள்ள கேரள அரசின் சுற்றுலா மையமான   Bamboo Grove இல் ரிப்போர்ட் செய்யச் சொல்லி இருந்தார்கள்.  இதில் என்ன பியூட்டி என்றால் நாம் ஆன்லைனில் புக் செய்யும் போது,  ஐந்தாம் தேதி மாலை கிளம்புகிறோம், 10 மணிக்குள் போய்ச் சேர