Posts

Showing posts from January, 2024

பூர்த்தி செய்ய வேண்டாம்; நிரப்பினால் போதும்..!

  பூர்த்தி செய்ய வேண்டாம்; நிரப்பினால் போதும்..! பூர்த்தி செய்யவும். ஃபில் ( FILL ) பண்ணவும். இவ்வாறு செய்யவும், பண்ணவும் போன்ற சொற்களை இணைத்துப் பயன்படுத்துவது இப்பொழுது பெருவழக்காகியிருக்கிறது. பொதுவாக, பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தும் போதுதான் இந்த செய்யவும், பண்ணவும் போன்ற சொற்கள் பின்னொட்டாகத் தேவைப்படும். சான்றுக்கு, ரீட் (READ ) பண்ணு ரைட் (WRITE) பண்ணு பேஸ்ட் (PASTE )பண்ணு பூர்த்தி செய்யவும் ஃபில் (FILL )பண்ணு குக் (COOK) பண்ணு ஓபன் (OPEN) பண்ணு க்ளோஸ் (CLOSE ) பண்ணு ஸ்டார்ட் (START) பண்ணு ஆப்பரேட் (OPERATE ) பண்ணு ... பட்டியலுக்கு முடிவே இல்லை.... எளிமையாக , இனிமையாக இவற்றைச் சொல்ல முடியும். ரீட் (READ ) பண்ணு -படி ரைட் (WRITE) பண்ணு - எழுது பேஸ்ட் (PASTE )பண்ணு -ஒட்டு பூர்த்தி செய்யவும் -நிரப்பு ஃபில் (FILL )பண்ணு -நிரப்பு குக் (COOK) பண்ணு -சமை ஓபன் (OPEN) பண்ணு - திற க்ளோஸ் (CLOSE ) பண்ணு - அடை அல்லது மூடு ஸ்டார்ட் (START) பண்ணு -தொடங்கு ஆப்பரேட் (OPERATE ) பண்ணு -இயக்கு ஆனாலும் நமக்கு பண்ணு என்ற சொல் தேவைப்படுகிறது. பூர்த்தி என்பதற்கு இணையாக நிறைவு அல்லது ம

எழுத்துகளை மிச்சம் பிடித்து என்ன செய்யப் போகிறோம் ?

  தைபூச தேர் திருவிழா - தைப்பூசத்  தேர்த் திருவிழா இரண்டுக்கும் மூன்று மெய்யெழுத்துகள்தாம் வேறுபாடு.  ஆனாலும் மெய்யெழுத்துகளைத் தவிர்த்து விட்டுச் சந்திப்பிழைகளுடன் வாழப் பழகிவிட்ட நாம் இப்பொழுதெல்லாம் இதைப் பொருட்படுத்துவதே இல்லை.  அதிலும் நண்பரொருவர் கேட்டதுதான் இங்கு உச்சக்கட்டம்.... "புள்ளி வச்ச எழுத்து இல்லேன்னாத்தான் என்ன...அதான் படிச்சதும் புரியுதே....அப்புறம் என்ன ....?" என்றார் . சரிதான்....படித்தால் புரிந்து விடும்தான்.  அவருடைய பெயரில் இருந்து மெய்யெழுத்தொன்றை நீக்கி விட்டு எழுதிக்காட்டினேன் . தலையிலடித்துக் கொண்டு ஒத்துக்கொண்டார். அவரது பெயரை இங்கு சொல்ல முடியவில்லை. தைப்பூசத் தேர்த் திருவிழா என்று வல்லின ஒற்றுகளுடன் சந்திப்பிழைகளற்று எழுதும் பொழுது அத்தொடர் அழகும் முழுமையும் அடைவதை உணர வேண்டும்.  எழுத்துகளை மிச்சம் பிடித்துச் சேர்த்து வைத்து நாம் ஒன்றும் செய்யப் போவதில்லை.  தாராளமாகப் பயன்படுத்துவோமாக......!