Posts

Showing posts from July, 2023

RUSKIN BOND

 கொல்கத்தாவில் இருந்து டேராடூனுக்கு இரண்டு இரவுகள் ரயிலில் பயணித்துக் காலையில் வந்து இறங்கிய சிறுவன் ரஸ்டிக்கு அவனது பாட்டி  தயார் செய்து வைத்திருந்த கஞ்சி, வாட்டப்பட்ட ரொட்டி, முட்டை ஊத்தப்பம், தக்காளியுடன் வறுத்த பன்றி இறைச்சி, வாட்டப்பட்ட ரொட்டிக்கானபழப்பாகு, இனிப்பான பால் விடப்பட்ட தேநீர் ஆகியவற்றைக்  கொண்ட காலை உணவுடன் தான் ரஸ்கின் பாண்ட் சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானார்.  தற்செயலாக ரஸ்டியின் வீர தீரங்கள் என்று தலைப்பிடப்பட்ட மொழிபெயர்ப்பு நூல் ஒன்று கைக்குக் கிடைத்தது.  அதன் முதல் அத்தியாயத்தின் முதல் பத்தியிலேயே மேற்கண்ட அசத்தலான எழுத்தின் மூலம் Ruskin Bond  என்னை வெகுவாகக் கவர்ந்தார்.   சந்திப்பிழைகள் மலிந்து கிடப்பதாலும் அப்படி ஒன்று இருக்கிற உணர்வு கூட இல்லாமல் இப்பொழுது பலரும் எழுதுவதாலும் தமிழ் நூல்களாக இருந்தால் ஓரிரண்டு பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டுத் தவிர்த்து விடுவதும் , பிழைகளற்று இருந்தால்  எடுத்துக் கொள்வதும் எனது வாடிக்கையாகி விட்டிருக்கிறது.  கே பாலச்சந்திரன் என்பவரது தமிழாக்கத்தில் பிழைகளற்ற தெளிந்த நூலாக‌ ரஸ்டியின் வீரதீரங்கள் என்ற புத்தகம்  கண்

அணிலாடும் முன்றில்

 கோயம்புத்தூர்ப் புத்தகத் திருவிழாவுக்கு இரண்டாவது நாளில் சென்றிருந்தேன். இம்முறையும் எல்லா ஸ்டால்களிலும் மக்கள் புத்தகங்கள் வாங்குவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.  இளம் தலைமுறையினர் நிறையப் பேரைப் பார்க்க முடிந்தது. சென்ற முறை Food Court இருந்த இடத்தையும் சேர்த்து ஸ்டால்கள் அமைத்திருந்தனர்.  நண்பர்‌ ஆறுமுகம் நா.முத்துக்குமாரின் 'அணிலாடும் முன்றில்' கிடைத்தால் வாங்கி வரச் சொல்லியிருந்தார்.  ஏற்கெனவே அணிலாடும் முன்றிலைப் படித்திருந்தாலும் புத்தகத்தை அவரிடம் கொடுப்பதற்கு முன்பாக மீண்டும் ஒருமுறை படித்து முடித்தேன்.  'கிராமம் நகரம் மாநகரம்' கல்கியில் தொடராக வந்த போதுதான் முதன்முதலாக நா.முத்துக்குமாரை வாசிக்கிறேன் . அதன்பிறகு பட்டாம்பூச்சி விற்பவன், வேடிக்கை பார்ப்பவன் உள்ளிட்ட சில. மனதுக்கு நெருக்கமான , சற்றே ஏக்கமும் நெகிழ்ச்சியும் இழையோடும் மென்னடை அவருடையது.  அணிலாடும் முன்றிலில் அண்ணன் , அக்கா , தம்பி என உறவுமுறைகளைத் தலைப்பாகக் கொண்டு ,அதற்கேற்றவாறு  தான் வாசித்த படைப்புகளிலிருந்து சில வரிகளை எடுத்து அதன் பின்னணியில் எழுதியிருப்பார். அதில் ஒரு பகுதியில் ஒர

பேக்கரிகள்

 தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பயணித்திருப்பவர்கள் கோயம்புத்தூர் -திருப்பூர்ப் பகுதிகளில் மட்டும் அளவுக்கதிகமான பேக்கரிகள் கொட்டிக் கிடக்கின்றன என்பதையும் , அத்தனையிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்து கிடக்கிறார்கள் என்பதையும் கவனித்திருக்கக் கூடும். இரவும் பகலுமாக லைட் டீ, மீடியம் டீ, சுக்கு காஃபி, சுக்குப் பால், லெமன் டீ, பாதாம்பால் ஹாட் & கூல், பால்,‌பூஸ்ட் ,இஞ்சி டீ எனக் குடித்தும், வடை, போண்டா, பஜ்ஜி, பஃப்ஸ், சமோசா, சுண்டல், சால்ட் பிஸ்கட், சாட் வகையறாக்கள் ,தேங்காய்பன் எனத் தின்றும் தள்ளுகிறார்கள்.  போகையிலும் வருகையிலும் பேக்கரியில் தனியாகவோ , நண்பர்களுடனோ குறைந்தபட்சம் ஒரு குவளைத் தேநீராவது அருந்துவதென்பது பலவித சௌகர்யங்களைத் தருகிறது.  வாகனத்தை நிறுத்தி ஃபோன்கால்கள் பேச, டாய்லெட் பயன்படுத்த, யாரையேனும் சந்திக்க , ட்ரைவிங்கின் போது சற்று ரிலாக்ஸ் செய்ய, ஓய்வெடுக்க என பேக்கரிகள் மல்டி பர்பஸ் பாயின்ட்டுகளாக மாறிவிட்டிருக்கின்றன.  பேக்கரிகள் இல்லாத சாலைப் பயணங்களைக் கற்பனை செய்ய இயலவில்லை.  என் வீடிருக்கும் பகுதியில் ஏற்கெனவே விதவிதமான பேக்கரிகள் நிறைந்திருந்தாலும் கடந்த ஒரு