Posts

Showing posts from October, 2010

ஏன் செழுங்காரிகை? எதற்குச் செழுங்காரிகை?

காரிகையென்னுஞ் சொல்லுக்கு நான்கு பொருள்களுண்டு. *காரிகை என்பது அழகினைக் குறிக்கும். *காரிகை என்பது பெண்ணையும் குறிக்கும். காரிகை என்பது யாப்பருங்கலக்காரிகை என்னும் யாப்பிலக்கண நூலின் சுருக்கப்பெயராகும். *எழுத்தெண்ணிப் பாடும் கட்டளைக் கலித்துறைக்கும் காரிகை என்னும் பெயருண்டு. எவ்வாறாயினும், நாமிங்கு காரிகைக்குச் செழிப்பூட்டிச் செழுங்காரிகை என வைத்துள்ளோம்.   செழுங்காரிகை என்னுமிவ்வலைப்பூவில் கவிதைகளும், கவிதை இலக்கணமும் வலையேற்றப்படவுள்ளன.கவிதைகளுக்குக் கவிதை மூலமாகவே விடையிறுக்கும் வண்ணம், இவ்வலைப்பூவில் பார்வையாளர்களும் பங்கு பெற வாய்ப்புத் தரப்படுகிறது. எளிமையான வினாக்கள் கவிதை வடிவில் இங்கு பதியப்படவுள்ளன. உங்களில் யார் வேண்டுமானாலும் அவற்றுக்கு விடை தரலாம்.வினா என்ன வகையான பாவகையிலமைந்திருக்கிறதோ விடையும் அதே பாவகையிலமைந்திருக்க வேண்டுமென்பதே இத்ல் சவால்! மேலும், பெயருக்கேற்ப யாப்பருங்கலக் காரிகையிலுள்ள 44 காரிகைகளும் சீரான கால இடைவெளிகளில் இங்கு விளக்கபடவுள்ளன.  தமிழ்ச்செய்யுளிலக்கணத்தை அலசி ஆராயவும், ஐயங்களைப் போக்கவும், ஆர்வத்தை ஏற்படுத்தவும் மேற்கொள்ளப்படும் இம்முயற்சிக்குத் த்

தமிழ் கூறும் நல்லுலகுக்குத் தாள் பணிந்த வணக்கம்!

     ஓலைகளையும்,சீலைகளையும்,காகிதத்தையும் கடந்து, சீரிளமைத் திறம் மிகுந்த தமிழ் மொழி இன்று காற்று வழியாகவும் கம்பி வழியாகவும் விரல் தொடும் தூரத்தில்,கண்ணெதிரில்,கணிப்பொறித்திரையில் கவினுற ஒளிர்கிறது.      தமிழ் நுட்பமும் தொழில் நுட்பமும் விந்தை புரியும் இந்தப் புதிய பரிமாணம் உலகை உள்ளங்கைக்குள் கொணர்கிறது.      எண்ணற்ற் உள்ளங்களின் எண்ணங்கள் சங்கமிக்கும் இவ்விணையப் பெருவெளியில் என்னையும் இணைத்துக்கொள்கிறேன்.      செழுங்காரிகை என்னும் பெயரில் எனது உள்ளத்துதிப்பவற்றை வலையேற்றுகிறேன். வாருங்கள்,  வாசியுங்கள், வாழ்த்துங்கள்.எனது இடுகைகளுக்கு உங்கள் பின்னூட்டங்கள் உரமாக அமையட்டும்! நன்றி!!                                                                                                                                 என்றும் உங்கள்,                                                                                                        எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்.