Posts

Showing posts from August, 2012

பதினாறு பேறுகள்

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று சொல்கிறார்களே,, அந்தப் பதினாறு என்னென்ன என்று கேட்டிருந்தார் அன்புக்குரிய GM.BALASUBRAMANIYAM  அவர்கள்.. இதோ... புகழ் கல்வி ஆற்றல் வெற்றி நன்மக்கள் பொன் நெல் அறிவு பெருமை ஆயுள் நல்லூழ் இளமை துணிவு நோயின்மை நுகர்ச்சி பொருள்

பசி வந்தால் பறக்கும் பத்து எவை என்று தெரியுமா?

பசிவந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே ... அந்தப் பத்து என்னென்ன என்று தெரியுமா? நல்வழியில் ஔவையார் கூறுகிறார். பாடலைப் பாருங்கள்... பசி வந்து விட்டால் என்னவெல்லாம் நம்மை விட்டுப் பறக்கின்றன என்று.. மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவமுயற்சி தாளாண்மை - தேனின்  கசிவந்த சொல்லியற்மேற் காமுறுதற் பத்தும் பசிவந்திடப் பறந்து போம்!

தூய தமிழ்ச்சொற்கள்

நிஜம் - உண்மை நிஷ்டை - தூக்கம், உறக்கம் சுபாவம் - இயல்பு, தன்மை சுபிக்ஷம் - செழிப்பு, வளமை கூஜா - குவளை அவஸ்தை - துன்பம் தூய தமிழ்ச்சொற்களை  வலைப்பூக்களில் பயன்படுத்துவோம்..

சாய்னா நெஹ்வால்----வாழிய பல்லாண்டு..!

Image
பொன்மகள் போற்றுதும் பொன்மகள் போற்றுதும் வெண்கலம் வீரத்துடன் வென்று கொடுத்துநம் பெண்குலம் சிறப்பித்த தால்.               ( சிந்தியல் வெண்பா) தங்கத்தைத் தவற விட்டாலென்ன...? வெண்கலம் வென்று வந்தவளே ஒரு தங்கமகள்தானே...?                 சாய்னா நெஹ்வால்              (வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா) விறகுதள்ளி யரிசியிட்டு விதியதன் மேல் பழிசுமத்திZ இறகுகிள்ளிச் செவிகுடைந்த வழக்கமெலா மொழிந்ததுகாண் இறகணிந்த சிறுபந்தா லிருபஃதே யகவைகொண்ட‌ திறம்மிகுந்த வொருமங்கை திசைபலவு முலவிவந்து குவித்தவெற்றி யரும்பெண்ணைக் குலத்திற்கே பெருமையாம் புவிப்பந்தில் நம்நாடும் பூண்டதுகாண் புதுவாகை                                                                                              (தரவு) ஆந்திரத்துத் தலைநகராம் ஐதராபாத் தினில்பிறந்து தேர்ந்திறகுப் பந்தாட்டந் தினந்தோறும் பயிற்சிபெற்று உலகளவில் பலபோட்டி கலந்துவெற்றி           வலம்வருஞ்சீர் நலமிகுந்த விளஞ்சாய்னா நேவல்வா ழியநெடுநாள்! அதிவிரைவில் முதலிடத்தைத் தரவரிசை   தருமெனலாம் பதக்கங்கள் பலவள்ளிப் பட்டங்கள் பலசூடி நம்மினிய நாட்டுக்குப்

யாப்பருங்கலக்காரிகை - அவையடக்கம்

                                       அவையடக்கம் சுருக்கமில் கேள்வித் துகள்தீர் புலவர் முன் யான் மொழிந்த‌ பருப்பொருள் தானும் விழுப்பொரு ளாம்பனி மாலிமயப் பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாய் இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ் விருநிலமே!        அவையடக்கத்தை முன்னர்க் கண்டோம். இப்பாடலில் மீண்டும் அவையடக்கத்தை வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.                                      பதவுரை சுருக்கமில் -    அளவிலா கேள்வி -    கேள்வியறிவு துகள் -    குற்றம் மொழிந்த -    கூறிய‌ பருப்பொருள் -    (சிறப்பற்ற) பிண்டப்பொருள் விழுப்பொருள் -   சிறந்த பொருள் மால் -    பெரிய‌ பொருப்பகம் -   மலை இருநிலம் -   உலகம்                                                  தெளிவுரை    அளவிலாத கேள்வியறிவினையுடைய குற்றமற்ற புலவர்களின் முன் நான் கூறிய இச்சிறப்பில்லாத பாடு பொருளும் பனிபடர்ந்த பெரிய இமயமலையை அடைந்த இழிவான கரிய காக்கையும் பொன்னிறமாய்த் தெரிவது போல சிறந்த‌ நுண்பொருளாக இந்த உலகம் உரைக்கு மல்லவா.                                        

இரவின் பாடல்-நள்ளிரவில் எழுதுகிறேன்

Image
இரவின் பாடல் வழிந்தோடும் இருளில் வாய்த்த வலிகளற்ற சஞ்சாரம் நீண்டு கொண்டே செல்கிறது. திசை நிரப்பும் கருமை மெலிதான குரலில் இரவின் தீரா வேட்கையை முணுமுணுத்துக் கொண்டேயிருக்கிறது. ஏதோ ஒன்றைச் சொல்ல எந்நேரமும் இரவு முயன்றுகொண்டே இருக்கிறது. இன்றுவரை அஃது என்னவென்று சொல்லிவிட்டதா இல்லையா என்பது மட்டும் புரியவே இல்லை. இந்த இரவுதான் போகுதே போகுதே இழுத்துக் கட்ட கயிறு கொண்டு வா நண்பனே நண்பனே என்ற திரைப்பாடலினை  அண்மையில் கேட்டேன்.வசீகரிக்கும் வரிகளும், மயக்கும் இசையும் வழிந்தோடும் அப்பாடலினை மீண்டும் கேட்கத் தோன்றியது. காணொளியுடன் பார்த்த போது இரவின் மீதான காதல் எல்லாருக்கும் ஒருவிதத்தில் எப்பொழுதும் அல்லது எப்பொழுதாவது பீறிட்டுக் கொண்டுதான் இருக்கிறது எனத் தோன்றியது.பொய்யான வாழ்வில் மெய்யான இன்பந்தரும் மது போதையோ (பாடல் வரிகள்), இலக்கிய இன்பமோ,வாசித்தலின் சுகானுபவமோ, கூடிக்களித்தலின் பேரின்பமோ எதுவோ ஒன்று இரவின் நிறத்தை மாற்றிக் கொண்டேதான் இருக்கிறது. இரவானது நள்ளிரவாகப் பரிணமிக்கும்போது அதன் நிறமும் அடர்த்தியும் மாறத் தொடங்கி விடுகிறது.பகல்பொழுது இரவை

அட ... நாமளும் ஃபேமசாயிட்டோம்.....

Image
வாழ்க போட்டோபுனியா.... வாழ்க போட்டோபுனியா....

கொல்லாதே...!

Image
உனக்கு  ஓட்டுநர் உரிமம் யார் கொடுத்தது? ஸ்கூட்டி பெப்பில் வந்து மோதாமலேயே தினமும் ஓராயிரம் பேரையாவது கொல்கிறாய்....!

தூய தமிழ்ச்சொற்கள்,

மரியாதை - கண்ணியம், மாண்பு,மதிப்பு,மாட்சி மவுனம் - அமைதி மனோகரம் - அழகு,எழில் மனோபாவம் - மனநிலை மாதம் - திங்கள் மனுஷன் - மனிதன், மாந்தன்

விண்மீன்களை என்ன செய்தாய்...?

Image
எனது தூக்கத்தைத்தான் பறித்து விட்டாய்..! இந்த விண்மீன்களை  என்ன செய்தாய்... இரவு முழுக்கத் தூங்காமல் முணுமுணுத்துக் கொண்டே இருக்கின்றன...!

யாப்பருங்கலக்காரிகை -பாயிரம்- உரை

                                                           பாயிரம்                                                  அவையடக்கம் தேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத் தெண்ணீரருவிக் கானார் மலயத் தருந்தவன் சொன்னகன் னித்தமிழ்நூல் யானா நடாத்துகின் றேனென் றெனக்கே நகைதருமால் ஆனா வறிவின வர்கட்கென் னாங்கொலெ னாதரவே!                                                                                   யாப்பருங்கலக் காரிகை‍‍‍‍‍‍ - 2. "ஆயிர முகத்தா னகன்ற தாயினும் பாயிரமல்லது பனுவலன்றே" என்று சொல்வர். காரிகையாசிரியரும் இதில் தவறாது பாயிரத்துடன் தொடங்குகிறார்.                       அக்காலத்தில் நூலாசிரியர் தனது நூலினைக் கற்றோர் அவையில் அரங்கேற்ற‌ வேண்டும். அவையோரது ஐயங்களை அகற்றிய பின்னரே நூலானது அரங்கேறும். எனவே நூலின் அருமையையும், நூற்பொருளின் தன்மைகளையும் முதலில் அவையோரிடத்து அறிவித்துத் தனது எளிமையையும் நூலாசிரியர் புலப்படுத்துவது வழக்கம்.                    ஆன்றோர் நிறைந்த அவையில் தனது அடக்கத்தைக் கூறிவிடுவதாலும்  இதனால் அவையோர் மிகைபடக் கேளாது மென்மையாக அடக்கப்பட்டு விடுவதால

கவிஞர்களே வாருங்கள்.. கவிதை எழுதுவோம்

முகடு தவழும் முகில் பொதிகள்; புழுதி களையும் மழைத் துளிகள்; மனது கழுவும் மதியின் ஒளிகள்; கனவில் சிரிக்கும்  கன்னி வெடிகள்; மிழற்றிப் பிதற்றும் மழலை மொழிகள்; அலர்ந்து கவரும் அழகு மலர்கள்; ஈர்த்துக் கொல்லும்  இரண்டு விழிகள்; கவிதையைத் தொடர்ந்து எழுதி முழுமையாக்குங்கள்...

தூய தமிழ்ச்சொற்கள்

பரிகாரம் - மாற்று, திருத்துதல், சரிசெய்தல் பரிகாசம் -எள்ளி நகைத்தல் சுங்கம் - வரி , இறை சுந்தரம் - அழகு , பொலிவு கறார் - உறுதி