Posts

Showing posts from June, 2021

முடிவற்ற சாலை....

  அஃதொரு காலைநேரத் திங்கள்கிழமை.   “சங்கரன்கோவில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்து நிமிட வேலை ஒன்று இருக்கிறது.புதன்கிழமை போயிட்டு வந்துடலாமா…?” என அலைபேசியில் கேட்டார் நண்பர் ஆண்டனி.   கோயம்புத்தூரிலிருந்து ஆறுமணி நேரப் பயணம்.   ”அப்படியா….?” என ஒரு கணம் யோசித்தேன்.   “சங்கரன்கோவிலில் பதினோரு மணிக்கெல்லாம் வேலை முடிஞ்சுடும்.அப்படியே குற்றாலம் போய்க் குளிச்சிட்டு, செங்கோட்டை பார்டர் கடைல ஈவினிங் பரோட்டாவையும் சாப்ஸையும் ஒரு வெட்டு வெட்டிட்டு வரலாம்”          என்று அடுத்த அஸ்திரத்தை எறிந்தார்.   இது போதாதா…”எத்தனை மணிக்குக் கிளம்பணும் ..?” என்று கேட்டுவிட்டு , “போறதுதான் போறோம்…அப்படியே தென்மலையையும் ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்துடலாம் ” என்றேன்.    பதிலுக்கு அவர் “தென்மல போறதுன்னு ஆயிடுச்சு..அப்படியே கொல்லம் பீச்சுல கொஞ்சம் நேரம் காத்து வாங்கிட்டுக் கடல் தண்ணில கால நனைச்சுட்டு கொச்சின் வழியாக் கோயம்புத்தூர் வந்துடலாம்” என்றார்.       ”கொல்லம் போறதுக்குப் பதிலா தென்மலையில் தங்கிட்டு அச்சன்கோவில் வழியா கவியப் பார்த்துட்டு வரலாம்..ரொம்ப நாளா நம்ம ப்ளான்ல இருக்கு…