Posts

Showing posts from December, 2022

நமக்கும் ட்ராஃபிக் சென்ஸுக்கும் ஏன் இத்தனை தூரம்...?

 போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க தனியாக கோச்சிங் கிளாஸ் எல்லாம் போக வேண்டாம்.... கோர்ஸும் படிக்க வேண்டாம்.... அடிப்படையான அறிவு இருந்தாலே போதும்....! ஆனாலும் நம்மில் பெரும்பாலானோர்க்கு ஏனோ ரூல்ஸ் ஃபாலோ பண்ணுவதில் அத்தனை சோம்பேறித்தனம்......!  குறைந்தபட்சம் 30 கிலோமீட்டர் இடைவேளையில் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்குப் பயணித்தாலே கீழ்க்காணும்  பட்டியலில் உள்ள பல நான்சென்ஸ்களைப் பார்க்க முடியும்.  * இண்டிகேட்டர் போடாமல் சடாரெனத் திரும்பிப் பதைபதைக்க வைப்பது • போட்ட  இன்டிகேட்டர்  கதறுவது கூடக் கேட்காமல் ஆஃப் பண்ணாமலேயே ஒரு தியான நிலையில் ஓட்டி எங்கு திரும்பப்போகிறார்களோ என சஸ்பென்ஸ் வைப்பது •  லெஃப்ட் இன்டிகேட்டரைப் போட்டுவிட்டு ரைட்டில் திரும்பி சர்ப்ரைஸ் கொடுப்பது •   நான்கு வழிச்சாலையின் வலப்புற டிராக்கில் சாவகாசமாக ஓட்டிக் கடுப்பேற்றுவது •    தலை போகிற அவசரம் போல இரண்டு டூவீலர்களில் பேசிக்கொண்டே பேரலலாக ஓட்டுவது  •    சாலையின் விளிம்புக் கோட்டைத் தாண்டி வெளியே நிறுத்தாமல் பாதி வாகனம் சாலையில் நீட்டிக் கொண்டிருப்பது போல நிறுத்தி விட்டுச் செல்வது •    ஆளே இல்லாத சாலையிலும்  ஐந்

பாராட்டுகள் -பாராட்டுக்கள் , எது சரி....?

 பாராட்டுகள் -பாராட்டுக்கள் வாழ்த்துகள் -வாழ்த்துக்கள்  எது சரி....?  பொதுவாக, கள் என்பது இரண்டு வழிகளில் பொருள்படும்.  கள் என்பது மதுவையும் குறிக்கும், பன்மையைக் குறிக்கும் விகுதியாகவும் வரும்.   மரங்கள், செடிகள், கடல்கள், கண்கள், காய்கள், நாற்காலிகள், பறவைகள் - இங்கெல்லாம் கள் என்பது பன்மையைக் குறிக்கும் விகுதி; தனியே பொருள் தராது; தனிச் சொல்லும் அன்று.   தென்னங்கள்  பனங்கள்   அரிசிக்கள்  நாட்டுக்கள்   இங்கெல்லாம் கள் என்பது மதுவின் ஒரு வகை. தென்னையில் இருந்து, பனையிலிருந்து எடுக்கப்பட்ட கள்.  அரிசிலியிருந்து எடுக்கப்பட்ட கள் அரிசிக்கள்  அப்படி இருக்க வாழைக்கள் என்று சொன்னால் அது வாழையிலிருந்து எடுக்கப்பட்ட கள் என்று பொருள் தரும்.   வாழைகள் என்றால் பன்மைப் பொருளில் வரும். வாழைக்கள்- வாழைமரத்துக்கள். வாழைகள் - பல வாழை என்ற பன்மை.  இப்போது பாராட்டுக்கு வருவோம்.  பாராட்டுக்கள் என்றால் பாராட்டுக்குரிய கள் அல்லது பாராட்டில் இருந்து எடுக்கப்பட்ட கள் அல்லது பாராட்டால் ஆன கள்.  எனவே பாராட்டுகள் என்பதே சரி....! வாழ்த்துக்கும் அதுவே....   வாழ்த்துக்கள்- வாழ்த்தால் ஆன கள்   வாழ்த்துகள்- வாழ்த்

எளிய தமிழ் இனிய தமிழ் - இனிக்கும் இலக்கணம்

  மண்வெட்டி கொடுத்தான் (1) மண்வெட்டிக் கொடுத்தான் (2) இவ்விரண்டுக்கும் இடையே என்ன வேறுபாடு....?  மண்வெட்டி கொடுத்தான் எனும் பொழுது மண்வெட்டியைக் கொடுத்தான் எனப் புரிந்து கொள்கிறோம்.   கூட ஒரு 'க்' சேர்த்து மண்வெட்டிக் கொடுத்தான் என்னும்பொழுது மண்ணை வெட்டிக் கொடுத்தான் எனப் புரிந்து கொள்கிறோம்.    ஒரே ஓர் எழுத்து சேரும்பொழுது பொருள் எவ்விதம் மாறுகிறது எனப் பார்த்தால்,      நுட்பமாகப் பொருள் உணர்த்துவதும் தமிழின் சிறப்புகளுள் ஒன்று என்பது புரியும்.     ஆனால் நடைமுறையில் நாம் இரண்டு இடங்களிலுமே மண்வெட்டி கொடுத்தான் என்று பிழையாகவேதான் எழுதி வருகிறோம். 'க்' சேர்த்து எழுதுவது இல்லை.  சொல்லின் இறுதியில் 'க்' எனும் மெய் எழுத்து வராது எனும் தவறான புரிதலும், 'க்' சேர்க்காவிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது என்ற அலட்சியமும், திரும்பத் திரும்ப இவ்விதமாக எழுதப்பட்டதையே படித்துப் பழக்கமாகிவிட்டதுமே காரணம்.  க்,ச்,த்,ப் எனும் வல்லின மெய்கள் பெரும்பாலான இடங்களில் மிகுந்தே வரும் . இது வலி மிகுதல் எனப்படும்.  மேலும் சில சான்றுகளைப் பார்ப்போம்.   1) . வேலை கொடுத்தான் - க்

அந்த நாலு பேரு யாரு ?

 நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்க என்ற ஒரு இன்டர்நேஷனல் காரணத்துக்காகவே நிறையப் பேர் சொந்த விருப்பங்களை கூடத் தியாகம் செய்து தவ வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.  இந்த டயலாக்கைத் தூக்கிக் கொண்டு  என்னிடம் வந்தார் நண்பர் ஒருவர்.    "அப்படிப் பண்ணாத.... இப்படிப் பண்ணாத... அதப்‌ பண்ணாத ....இதப் பண்ணாத  .... இல்லைன்னா நாலு பேரு நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்க....!" என்பது அவருடைய ஃபேவரைட் டயலாக். அவரிடம் கீழ்க்காணும்  கேள்விகளைக் கேட்டேன்.  #  அந்த நாலு பேரு யாரு....?  #  அவர்களின் செல் நம்பர் என்ன....?   # இந்த மாதிரி நாலு விதமாப் பேசுவது தவிர வேறு அவர்களுக்கு ஏதாவது வேலை அல்லது தொழில் என்று எதுவுமே இல்லையா....?   # அப்படி இல்லாத பட்சத்தில் அவர்களுடைய இந்த நாலு விதப் பேச்சை ஏன் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்? # ஒருவேளை அவர்களுக்கு இதுதான் வேலை என்றால் இதன் மூலமாக அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் என்ன அல்லது பயன் என்ன....? இந்தக் கேள்விகளைக் கேட்டதுமே அவர் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு கிளம்பினார்.   அந்த நாலு பேரில் அவரும் ஒருவராக இருப்பார் போலும் என நினைத்துக் கொண்டேன். 

ஏன் நாம் இப்படி.....?

 கோயம்புத்தூரில் வாலாங்குளத்திலும், பெரிய குளத்திலும், குறிச்சிக் குளத்திலும் பல கோடி ரூபாய் செலவில் பூங்காக்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. குறிச்சிக் குளக்கரையில் இன்னும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.   இங்கெல்லாம் ஒரு விஷயத்தைக் கவனித்தேன்... மொத்தப் பூங்காவிலும் குப்பைத் தொட்டி ஒன்றுதான் தூய்மையாக இருந்தது. ஏனெனில் அங்கு தான் யாருமே குப்பை கொட்டுவதில்லை. பெரும்பாலானோர் கைநீட்டிய திசையில், கால்போன தடத்தில், கண் கண்ட இடத்தில், போகிற போக்கில் குப்பைகளையும், கழிவுகளையும் வீசி எறிந்து பேரானந்தம் அடைகிறார்கள்.  பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள், ஐஸ்கிரீம் குச்சிகள், குப்பிகள், குவளைகள்,சிப்ஸ் பாக்கெட்டுகள், பிஸ்கட் கவர்கள், சாக்லேட் ரேப்பர்கள், வாட்டர் பாட்டில்கள்... இவை தவிர மீதியான உணவுப் பொருள்கள், தீனிகள், தின்பண்டங்கள் ,எச்சில்கள், தின்று துப்பப்பட்ட பாக்குக் கறைகள்...... மக்களே.....! நீங்கள் பூங்காவில் இருந்து வெளியேறிய மறுகணமே உலகம் அழிந்து விடப் போவதில்லை. அடுத்த நாளும் மக்கள் வருவார்கள்... அடுத்த வாரம் நீங்களே கூட மீண்டும் வரலாம்.... கொஞ்ச்ச்சம்...... ப்ளீஸ்.....!

இனிக்கும் இலக்கணம்- காற்றிசையும் நாற்றிசையும்.

 காற்றிசை  என்பதை எப்படிப் பிரித்து எழுதலாம்.....?   காற்று + இசை    அப்படியானால் நாற்றிசையை....?    நாற்று + இசை என்றும் பிரிக்கலாம்.  நான்கு + திசை என்றும் பிரிக்கலாம்.    தமிழின் நுட்பமும், ஆழமும், செறிவும், அழகும், வளமையும், தொன்மையும் இங்குதான் உச்சத்தில் நிற்கின்றன. உண்மையிலேயே காற்றுக்கு இசை உண்டா.... காற்றிலே இசை கலந்திருக்கிறதா.... அல்லது காற்று இசையைத் தோற்றுவிக்கிறதா....? வைரமுத்துவின் வரியிது....."துளை செல்லும் காற்று மெல்லிசையாதல்  அதிசயம்......!"   புல்லாங்குழலில் நுழையும் காற்று இசையாக வெளிப்படும் அதிசயத்தைச்  சிந்திக்க ஆரம்பித்தால் அது எல்லைகளற்று விரியும்.    90களில் வாசித்த மாலனின்  கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது.  காற்று ஆனா பெண்ணா என வினவியிருப்பார்.  காற்று ,   இருப்பதைக் கலைக்கிறது;  எல்லைகளைத் தேடுகிறது;  எப்போதாவது இசைக்கிறது....!    அப்படியானால் ஆணா ....?    ஈரம் சுமக்கிறது ;  இதம் தருகிறது ;  இலக்கில்லாமல் நடக்கிறது.....!  ஒருவேளை பெண்ணோ....?  அற்புதமான வரிகள் அவை .  மண் ,விண்,அனல், புனல், வளி என்னும் ஐம்பூதங்களில் கண்ணுக்குப் புலப்படாதது காற்று ம