செழித்த தளங்களில் ஊடாடும் வினாக்கொக்கிகள்


என் இதயத்தின் இடுக்குகளில்
எப்போதும் ஒரு தேன்கூடு ததும்பிச்சொரிந்து
நினைவுகளை அழிக்கிறது!
நாசியின் முன்னால் விரவிய
நறுமணம் எப்போதும் 
கடந்தகாலத்தை மூச்சிறைக்கச் செய்கிறது.
என் கவிதை ஏட்டின்
பக்கங்களில் மடித்து வைத்திருக்கும்
வானவில்
எழுத்துக்களை உறிஞ்சிக் கொள்கிறது.

நிம்மதி பாவும்
தளத்தின் புல்வெளிகளுக்குள்
எப்போதும் ஒரு புதைகுழி
ஒளிந்து கொள்கிறது.
வாழ்க்கையில் என் இருப்பை 
முடிவு செய்வது
யார் என்பதைத்தான்
அறிய முடிவதே இல்லை1

Comments

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி