அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை. இவையெல்லாம் வள்ளுவர் வாக்கு. அவர்தம் வாக்கை மெய்ப்பிக்க RVS குழுமத்தின் பத்மாவதி சோஷியல் சர்வீஸ் மையம் கோயம்புத்தூரில் சூலூர் குமரன் கோட்டத்தில் திறந்துள்ள உணவகத்தில் 30 ரூபாய்க்கு சைவச் சாப்பாடு தருகிறார்கள். இன்று திறக்கப்பட்ட இந்த சேவை நோக்கிலான உணவகத்தில் காலை , மதியம் , இரவு மூன்று வேளையும் இதேபோல மிகக்குறைவான விலையில் வெரைட்டியான சைவ உணவுகள் மிகத் தரமாகக் கிடைக்கின்றன. நூற்றுக்கணக்கான பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ணக்கூடிய மிகப்பெரிய அறை , மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படும் ஒட்டுமொத்த வளாகம், பெரிய கார் பார்க்கிங் வசதி , தூய்மையான கழிப்பறை வசதி , அடர்ந்த மரங்களடங்கிய குளுமையான, பசுமையான சூழல் என இந்த சேவை மையம் கம்பீரமாக நிற்கிறது . இன்றைய மதிய உணவு சோறு , சாம்பார் ,புளிக்குழம்பு, ரசம் , பாயசம் , கூட்டு , பொரியல் , ஊறுகாய் , மோர் என மிகச்சுவையாக இருந்தது. காலை மாலை இடைப்பட்ட நேரங்களில் டீ, காஃபி, ஸ்நாக்ஸும் உண்டு. ஏற்கெனவே 2007 இல் கோயம்புத்தூர் மேட
உம்மைபோல் வாழ எல்லோருக்கும் ஆசை தான் ஆனால் வழியில்லை இவ்வுலகில்,என்னே கொடுமை!
ReplyDeleteok
ReplyDeleteall the paths lead to grave.but your will may be consider by god!
ReplyDelete