கூடுவிட்டுப் போன பின்பும் கூடவருமோ பணமும்!


பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்(கு)
ஆவிதான் போனபின்(பு) ஆரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்!

                                                                            -நல்வழி - 22 


திரைகடல் ஓடியும் திரவியம் தேடச் சொன்ன ஔவையார், தேடிவைத்த பணம் எதுவரைக்கும் கூடவரும் என்கிறார். 
அதனால்தான் தேடிவைத்த பணத்தையும் பிறவற்றையும் நாமும் துய்த்துப் பிறர்க்கும் கொடுத்து வாழ வேண்டும் என்கிறார்.



ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென்(று) இட்(டு) உண்(டு) இரும்.
                                                                           நல்வழி - 10

வாழ்க்கைத் தத்துவத்தையும் அறவியலையும் ஔவைப்பாட்டி எவ்வளவு அழகாக நான்கு வரிகளின் நறுக்கென்று உரைத்து வைத்திருக்கிறார்!
ஔவையின் எழுத்துகள் அனைத்தும் ஔடதம் அல்ல, அமுதம்.   ஔடதம், நோய் தீர்க்கும் மருந்து, அமுதமோ , நோய் வராமல் தடுக்கும் அதிசயம்!



Comments

  1. நல்ல கருத்துக்களை நல்ல தமிழால் சொன்னதற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. ஔவை மொழி உண்மையிலேயே அமுத மொழிதான்

    ReplyDelete
  3. எத்தனை தான் நீர் சொன்னாலும் பணத்தாசைதான் ஒழியுமோ பண்ணாடைகளிடம்

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி