புவிமிதிக்கும் திருவிழா!


வீட்டு வாசற்படியிலேயே 
காலணி அணிந்துகொள்கிறாய்!
எப்போதாவது அதிசயமாக
வெறுங்காலால் நடப்பதைப்
புவிமிதிக்கும் திருவிழா என்று கூறினேன்;
புவி சொன்னது,
"இல்லை, இல்லை, இது என்னைப்
பூ மிதிக்கும் திருவிழா என்று!"



அழகுக் குறிப்புகளைக் கேட்டு
அழகாகியவர்கள் இருக்கிறார்களா எனத் 
தெரியவில்லை. ஆனால்,
நீ கேட்கும் போதுதான்
வெறுங்குறிப்புகள் கூட
அழகுக்குறிப்புகளாகிவிடுகின்றன.

Comments

  1. மிக அருமையான கவிதை......
    தொடர்ந்து எழுதுங்கள்......

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  2. காதல் காதல் காதல்

    ReplyDelete
  3. very good poems

    ReplyDelete
  4. அடேங்கப்பா! பாதத்தை பூவென்று யாரேனும் சூடிவிடப்போகிறார்கள் கவனம்.ஆனால் கவிதை நன்று!

    ReplyDelete
  5. good lines...


    GIRI

    ReplyDelete
  6. very nice and excellent
    valthukkal sir

    SLVM K.KANAKARAJ SENJERIMALAI

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி