எந்தனா என்றனா ?தமிழறிவோம்,


எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
எந்தன் பொன்வண்ணமே....
எந்தன் என்பது என்னுடைய , எனது என்னும் பொருளில் இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது.
என்+தன்=என்றன் என்றுதான் வரவேண்டும்.
,அதேபோல, உன்+தன்=உன்றன்.
பன்மையில் வரும் போது, எம்+தம்=எந்தம் என்று வரவேண்டும்.
அவைதான் என்பது அவைதாம் என்றும், அவர்கள்த்கன் என்பது அவர்கள்தாம் என்றும் வருவதுதான் சரியான தமிழ். 


விபத்தில் ஓட்டுநரின் கால் உடைந்தது
ஒட்டுநரின் கால் ரப்பரால் அல்லது மரத்தாலான செயற்கைக்காலாக இருந்து விபத்து நேர்ந்திருந்தால் கால் உடைந்தது என்பது சரி . கால் ஒடிந்தது என்பதுதான் தமிழின் மரபு. 
இயல்பான, எளிமையான, அழகான தமிழைப் பயன்படுத்துவோம்

Comments

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி