உறக்கம் வராதவனின் உளறல்கள் !


நள்ளிரவாகியும் உறக்கம் பீடிக்காத கண்களாலும், உருகிக் கொண்டிருக்கும் இதயத்தாலும், விரலிடுக்கில் ஒழுகும் கவிதையை இங்கே ஊற்றி வைக்கிறேன்! படித்துப் பாருங்கள்!!


விடிந்தபின்னும் என்மனதில்
  வெளிச்சம் வரவில்லை- துக்கம்
வடிந்துவிட என்கண்களில்
   வழியும் படவில்லை!


இடிந்துபோன இதயச்சுவர்
   இன்னல் தந்தது - என்னைக்
கடந்துபோன காலமெலாம்
   கருகி வெந்தது!


மடிந்துவிட்ட வழிகள்தேடி
   மனது துடித்தது.- அதில்
படிந்துவிட்ட பாசம்தடுக்கப்
   பரி தவித்தது!

உடைந்துபோன உள்ளத்திலே  
    ஊற்றுத் திறந்தது ‍ -நான்
அடைந்திருந்த கவலைகளை
   அலச மற‌ந்தது

கண்விழியில் கவலைச்சுமை
   காயம் செய்தது - என்
எண்ணமெல்லாம் கதறிப்புலம்ப‌
  எட்டிப் பார்த்தது1

Comments

  1. very nice

    ReplyDelete
  2. தகிக்கும் தவிப்பு!
    அருமையான வரிகள்!!

    ReplyDelete
  3. "கண்விழியில் கவலைச்சுமை
    காயம் செய்தது"
    அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. உறக்கம் அவ்வளவு எளிதில் வராதுதான்

    ReplyDelete
  5. very good work

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி