விடை தாரீர்!


வந்தியத் தேவனாம் வல்ல வரையனும்
குந்தவை தேவியும் கொண்டதுடன் - நந்தினி
என்னும் பழுவூர் இளவரசி யும்கொண்டு
பொன்னியின் செல்வனும் பார்த்திபனும் - இன்னுமே
எண்ணற்ற மாந்தர் இடங்கள் நிகழ்வுகள்
கொண்டு புதினம் குறைவறப் - பண்ணியே
என்றுந் தமிழர் இதயத்தில் வாழ்ந்திடும்
தன்னிக ரில்லாத் தலைவனைக் கண்டறிந்து
என்னவென் றிங்கே எழுதுவீர் -நன்றாகப்
பின்னூட்டத் தில்தான் பெயர் !

மேற்காண் வினாவுக்கு விடையளியுங்கள். வினாவின் பாவகை என்னவோ அதே பாவகையில்தான் விடையும் அமைந்திருக்க வேண்டும்!

Comments

Popular posts from this blog

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?

கூகுள் மேப்ஸ் - நல்லதொரு நண்பன்

கொஞ்சம் இதையும் தெரிந்து கொள்வோம்