ஏக்கப் பெருமூச்சின் எழுத்துவடிவம்
தலைவனைப் பிரிந்த தலைவி, ஆற்றாமல் தோழியிடம் எறிந்த ஏக்கப் பெருமூச்சின் எழுத்துவடிவமிது!
http://inthiya.in/ta/?p=7304
மாலை கவிந்ததடி- என்
மனதும் கனிந்ததடி-தோழீ
இருளும் குவிந்ததடி - என்
இதயம் குளிர்ந்ததடி!
இதயத்தி லிருப்பவர்போல் - என்னை
இருளும் தழுவியதடி- பிரிவால்
புழுதி படிந்திருந்த -மனதைப்
பூசிக் கழுவியதடி!
கூட்டை அடைந்திடவே- பறவைக்
கூட்டம் விரைந்ததடி - இதயக்
கூட்டில் வசிப்பவருடன் - மனது
கூடிக் கரைந்ததடி!
மேற்கே சூரியனும் - மங்கி
மெல்ல மறைந்ததடி.- என்
மேனி தவித்ததடி - அவரை
மேயத் துடித்ததடி!
மாலைக் குளிரினைச் - சுமந்து
மாருதம் வீசியதடி - என்னை
மாலை யிடுபவரின் - சேதியை
மனதில் பேசுதடி!
வானை நோக்குதடி -விழிகள்
வாசல் பார்க்குதடி- என்
வாழ்வைப் பகிர்பவரின் - இனிய
வரவை நோக்குதடி!
நேரம் கரையுதடி - அந்த
நிலவும் காயுதடி -என்
கோலத் திருமகனை -மனது
கொஞ்சப் பாயுதடி !
வாசனை பூசியபடி -மலர்கள்
விரிந்து மலர்ந்ததடி- என்
நாசித் துவாரத்தில் -புகுந்து
நெஞ்சம் கிளர்ந்ததடி
ஆவல் வளருதடி- என்
ஆவி துடிக்குதடி -என்
அவரைக் கண்டால்தான் -என்
ஆயுள் நிறையுமடீ !
மூன்றாம் கோணம் வலைபத்திரிகை- கவிதைப்போட்டி- |
மாலை கவிந்ததடி- என்
மனதும் கனிந்ததடி-தோழீ
இருளும் குவிந்ததடி - என்
இதயம் குளிர்ந்ததடி!
இதயத்தி லிருப்பவர்போல் - என்னை
இருளும் தழுவியதடி- பிரிவால்
புழுதி படிந்திருந்த -மனதைப்
பூசிக் கழுவியதடி!
கூட்டை அடைந்திடவே- பறவைக்
கூட்டம் விரைந்ததடி - இதயக்
கூட்டில் வசிப்பவருடன் - மனது
கூடிக் கரைந்ததடி!
மேற்கே சூரியனும் - மங்கி
மெல்ல மறைந்ததடி.- என்
மேனி தவித்ததடி - அவரை
மேயத் துடித்ததடி!
மாலைக் குளிரினைச் - சுமந்து
மாருதம் வீசியதடி - என்னை
மாலை யிடுபவரின் - சேதியை
மனதில் பேசுதடி!
நிலவும் எழுந்ததடி - வெண்மை
நிறமும் பரவுதடி - இந்த
நிமிடம் அவரருகில் - இருக்க
நினைவு துடிக்குதடி!
வெள்ளிப் பூக்களினால் - கருப்பு
வானம் சிரிக்குதடி - என்
வெல்லக் கட்டியவரை - விழிகள்
வெல்லத் துடிக்குதடி !
வானை நோக்குதடி -விழிகள்
வாசல் பார்க்குதடி- என்
வாழ்வைப் பகிர்பவரின் - இனிய
வரவை நோக்குதடி!
நேரம் கரையுதடி - அந்த
நிலவும் காயுதடி -என்
கோலத் திருமகனை -மனது
கொஞ்சப் பாயுதடி !
வாசனை பூசியபடி -மலர்கள்
விரிந்து மலர்ந்ததடி- என்
நாசித் துவாரத்தில் -புகுந்து
நெஞ்சம் கிளர்ந்ததடி
ஆவல் வளருதடி- என்
ஆவி துடிக்குதடி -என்
அவரைக் கண்டால்தான் -என்
ஆயுள் நிறையுமடீ !
மூன்றாம் கோணம் வலைபத்திரிகை- கவிதைப்போட்டி- |
அன்பு நண்பா தங்கள் மின்னஞ்சல் முகவரி தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.
ReplyDeletegunathamizh@gmail.com
அழகிய கவிதை நண்பா :)
ReplyDeleteமுனைவர் இரா.குணசீலன் said... 30/6/11 9:20 AM
ReplyDeleteஅன்பு நண்பா தங்கள் மின்னஞ்சல் முகவரி தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.
gunathamizh@gmail.com
thanq friend.. this is my e-mail id:
msrajiniprathapsingh@ymail.com
super..
ReplyDelete