எளிய தமிழ்....இனிய தமிழ்....!

 இன்று சாலையோரம் இருந்த பலகை ஒன்றில் காணக் கிடைத்த சொற்றொடர்.....

  ’இங்கு எந்த கடைகள் திறக்க அனுமதி இல்லை'

 இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது யாருக்கும் புரியாமல் இல்லை.  இஃதோர் எச்சரிக்கைப் பலகை.  இங்கு யாரும் கடைகள் திறக்கக் கூடாது என்பதை இவ்விதமாகச் சொல்லி இருக்கிறார்கள்.

 ஆனாலும் இத்தொடர் எப்படி இருந்திருக்க வேண்டும் எனப் பார்க்கலாம். முதலில், 'எந்த கடைகள்' என்பதில் 'எந்த'  என்ற சொல்லுக்குப் பின் வல்லெழுத்து மிகுந்து 'எந்தக் கடைகள்' என வந்திருக்க வேண்டும். 

 அடுத்து, இங்கு எந்தக் கடைகள் திறக்க அனுமதி இல்லை என்ற தொடரானது கேள்விக்குறியுடன் முடிய வேண்டிய ஒரு வினாவாகும். 

 இந்தியாவின் தலைநகரம் எது? 

வாரத்தின் முதல் நாள் எது?

புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவர் யார் ? என்பவை போல  ' இங்கு எந்தக் கடைகள் திறக்க அனுமதி இல்லை ' என்பதுவும் ஒரு கேள்வியாகும்.

  'இங்கு எந்த கடைகள் திறக்க அனுமதி இல்லை....?

    விடை:   

   பூக்கடை

     டீக்கடை 

     புத்தகக் கடை 

     செருப்புக் கடை 

     என்பது போல இருக்கலாம்.

     சரி , இதை எப்படி எழுதலாம் ?

      "இங்கு எந்தக் கடைகளும் திறக்கப்பட அனுமதி இல்லை"

 ( கடைகள் - கடைகளும்,திறக்க - திறக்கப்பட )

                அல்லது ,

 "இங்கு எந்தக் கடைகளையும் திறக்க அனுமதி இல்லை"

  (கடைகள் - கடைகளையும் ).

      எப்படி எழுதினாலும் பொருள் புரிந்து விடும்தான்,  ஆனாலும் முறையாக எழுதும்போது அழகாகவும் இருக்கும்; இனிமையாகவும் இருக்கும்; நிறைவாகவும் இருக்கும் . 

    இங்கு கூறப்பட்ட எடுத்துக்காட்டில் திருத்தப்பட்ட வடிவத்தையும், பிழையான வடிவத்தையும் அடுத்தடுத்து இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்தாலே இதை உணர முடியும்.

     தொடர்ந்து பேசுவோம்.....!

Comments

  1. ஒரு எழுத்து மாறுவதால், நிறுத்தற்குறியீடு இல்லைனால் ..... எத்தனை அர்த்தங்கள்...... எளிமையான அழகு விளக்கம்.

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

வகையுளி