அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை. இவையெல்லாம் வள்ளுவர் வாக்கு. அவர்தம் வாக்கை மெய்ப்பிக்க RVS குழுமத்தின் பத்மாவதி சோஷியல் சர்வீஸ் மையம் கோயம்புத்தூரில் சூலூர் குமரன் கோட்டத்தில் திறந்துள்ள உணவகத்தில் 30 ரூபாய்க்கு சைவச் சாப்பாடு தருகிறார்கள். இன்று திறக்கப்பட்ட இந்த சேவை நோக்கிலான உணவகத்தில் காலை , மதியம் , இரவு மூன்று வேளையும் இதேபோல மிகக்குறைவான விலையில் வெரைட்டியான சைவ உணவுகள் மிகத் தரமாகக் கிடைக்கின்றன. நூற்றுக்கணக்கான பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ணக்கூடிய மிகப்பெரிய அறை , மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படும் ஒட்டுமொத்த வளாகம், பெரிய கார் பார்க்கிங் வசதி , தூய்மையான கழிப்பறை வசதி , அடர்ந்த மரங்களடங்கிய குளுமையான, பசுமையான சூழல் என இந்த சேவை மையம் கம்பீரமாக நிற்கிறது . இன்றைய மதிய உணவு சோறு , சாம்பார் ,புளிக்குழம்பு, ரசம் , பாயசம் , கூட்டு , பொரியல் , ஊறுகாய் , மோர் என மிகச்சுவையாக இருந்தது. காலை மாலை இடைப்பட்ட நேரங்களில் டீ, காஃபி, ஸ்நாக்ஸும் உண்டு. ஏற்கெனவே 2007 இல் கோயம்புத்தூர் மேட
செந்தேர் உருளும் செந்தேன் கமழும் செஞ்சேரி ஊருக்கு -அங்கே செந்தமிழ் மலரும் சிந்தை குளிரும் செல்லும் யாருக்கும்..! வந்தோர் எவரையும் வாய்கள்ஆர வாழ்த்தி வரவேற்கும் - வாய்ப்புத் தந்தே வணங்கி வாழ வழிதரும் தலைமுறை தலைமுறைக்கும்..! உழைப்பும் தொழிலும் உயர்வும் மகிழ்வும் ஊரின் அடையாளம் -வாழ்வு தழைக்கும் படியொரு தன்மைக்கு இதுவே தரணியில் உவமானம்..! பெருமை மிகுந்த ஊருக்கின்னோர் பெயர்தரும் இடம் உண்டு- அழியாத் திருவாம் கல்வி புகட்டும் பள்ளி தெரிவோம் இங்கின்று..! மாணவர் வாழ்வில் ஒளியினை ஏற்றும் மாண்புறு அரும்பள்ளி- கல்வித் தேனவர் அருந்தி வெற்றியைப் பெரிதாய்த் தீட்டிடும் பெரும்பள்ளி..! அழியாச் செல்வம் கல்வியை வாரி அளிக்கும் கையள்ளி- அவர்தம் வழியாய் ஒளியாய் வாழ்வில் உருவாய் வரமாய் வரும்பள்ளி..! மழலையர் வாழ்வில் உன்னத நெறியுடன் மனிதம் புகுத்துங்கள்- நாளை அழ
அண்மையில் நண்பர் மல்லிகார்ச்சுனன் எனது நூலிலுள்ள செய்யுள்கள் ஒன்றிலிருந்து ஓர் ஐயம் கேட்டார். " சில அடிகளில் சொற்கள் பாதியாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி முன்னுள்ள சொல்லின் பின்னும் மறுபகுதி அடுத்து வரும் சொல்லின் முன்னும் சேர்க்கப்பட்டிருக்கின்றனவே.... ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்.....?" என்பது அவரது கேள்வி. 'வகையுளி'யைப் பற்றிக் கேட்கிறார் என்பது புரிந்தது. பள்ளி நாட்களில் செய்யுள் பகுதிகளைப் படிக்கும் பொழுது எனக்கும் இக்கேள்வி எழுந்ததுண்டு. ஒன்பதாம் வகுப்பில் யாப்பிலக்கணம் கற்கும் பொழுது எனக்குத் தெளிவானது. இதுகுறித்து ஒரு நகைச்சுவையான சம்பவத்தைப் பலரும் கேட்டிருப்பர் . ஒருவன் கடையின் பெயர்ப் பலகையின் முன்பு நின்று கொண்டு , "இங்கு , சாப்பா டுபோ டப்ப டும்" எனப் படித்துக் கொண்டிருந்தான். கூர்ந்து கவனித்த பொழுது "சாப்பாடு போடப் படும்" என்பதைத்தான் அவன் அவ்வாறு படித்துக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது. இதுவே செய்யுளில் வரும்பொழுது வகையுளி எனப்படுகிறது . சான்று: " மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்
The song is superb to see .... i think u d choreographd 2 ur stdts... your skills might have fallen 2 kannad also.... ok its entertaining
ReplyDelete