Posts

Showing posts from May, 2024

விருத்தமும் விஜயலட்சுமி அம்மாவும்

 "சுழித்துக்கொண்டோடும் வெண்பாக்களும் நுரைத்துக் கொண்டோடும் விருத்தங்களும்" என்று ஓரிடத்தில் வைரமுத்து அவர்கள் கூறியிருப்பார். ஆசிரியப்பாவின் இனங்களுளொன்றான ஆசிரிய விருத்தம் என்பது கவிஞர்கள் பலருக்கும் பெருவிருப்பான, இனிமையான பாவினம்.  அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் ஆரம்பித்து எழுசீர்,எண்சீர் எனப் பன்னிரு சீர் வரையும் செல்லும். ஒவ்வொரு விருத்தமும் நான்கடிகளைக் கொண்டிருக்கும். ஒவ்வோரடியிலும் ஆறு,ஏழு,எட்டு என 12 வரை சீர்கள் அமைந்திருக்கும் . அடிகள் தோறும் இச்சீர்கள் ஒரே அளவில் அல்லது ஒரே வாய்பாட்டில் வந்திருக்கும்.  இயற்சீரும் வெண்சீரும் மட்டுமே வரும்.  முதலடியில் என்ன விதமான சீர்கள் வருகின்றனவோ அவையே முறை மாறாமல் அடுத்தடுத்த அடிகளிலும் வந்திருக்க வேண்டும் . நான்கடிகளிலும் ஒரே எதுகையும், அடிகளுக்குள் மோனையும் வந்திருக்க வேண்டும் . "கழிநெடில் நான்கு ஒத்திறுவது குறைவில் தொல்சீர் அகவல் விருத்தம்" என்பது ஆசிரியர் விருத்தத்துக்கான யாப்பருங்கலக் காரிகை தரும் இலக்கணம்.   இத்தகைய இனிமையான பாவினமான விருத்தம் பாடுவதில் வல்லவரான திருமதி சு .விஜயலட்சுமி அவர்களின் வ

இரண்டு நிமிடங்களில் இதைத் தெரிந்து கொள்ளலாம்

  மெய்யெழுத்துகளின் மீது தமிழர்களுக்கு அப்படி என்ன வெறுப்பு எனத் தெரியவில்லை .வங்கி ஒன்றின் விளம்பரச் சிறு சுவரொட்டி ஒன்றை நகரில் ஆங்காங்கே பார்க்க முடிந்தது.  அவர்களது வங்கியில் இத்தனை சதவீதத்திலிருந்து Home Loan  ஆரம்பிக்கிறது என்பது விளம்பரத்தின் சாராம்சம்.  Home Loan  என்பதை அப்படியே தமிழாக்கி வீடு கடன் வசதி என அச்சடித்திருந்தார்கள் . இரண்டு ஆங்கிலச் சொற்களை   இணைக்கும் போது பெரும்பாலும் நேரடியாக அப்படியே இணைத்துக் கொள்ளலாம் . Home +Loan --Home loan.  அதையே வீடு +கடன் எனும் பொழுது வீட்டுக் கடன் என்றுதான் எழுத வேண்டும், எழுதவும் முடியும்.  அதிகப்படியாக ஒரு 'ட்' டும் ஒரு 'க்' கும் சேர்த்தால் வேலை முடிந்தது. இதைச் செய்யக் குற்றியலுகரப் புணர்ச்சி விதிகளை எல்லாம் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டியது இல்லை ....சும்மா சொல்லிப் பார்த்தாலே தெரிந்து விடும் ...  இரண்டையும் சேர்த்து வீடுகடன் எனச் சொல்லும்போது அங்கே ஏதோ முழுமை அடையவில்லை என்று.  எழுதும்போது வீடுகடன் என எழுதிவிட்டு படிக்கும்போது வீட்டுக் கடன் எனப் படிப்பவர்களைப் பார்த்தால் பரிதாபப்படத்தான் முடியும்.  செய்தித்தாள்கள்,

கொஞ்சம் இதையும் தெரிந்து கொள்வோம்

 கீழடி அருங்காட்சியகத்துக்குச் சென்றிருந்தபோது அங்கு வந்திருந்த பார்வையாளர்களில் பேரனும் பாட்டியும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது.  காட்சிப்படுத்தப்பட்டிருந்தவற்றைக் காட்டிப் பாட்டியிடம் இவையெல்லாம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டவை எனப் பேரன் கேட்க, மிகப் பழமையானவை என அறிந்திருந்த பாட்டிக்கு அதனை எண்களால் சொல்ல முடியவில்லை.  அந்தக் கணத்தில் மிகப்பெரும் எண்ணாகத் தனக்கு மனதில் பட்டதை வைத்து, "இதெல்லாம் நூறு வருஷம் இருக்கும் ....!" என்றார்.  தூக்கி வாரிப் போட்டது எனக்கு....!  அண்மையில் நண்பர் ஒருவர் பேச்சினிடையே இந்தச் சேர, சோழ ,பாண்டியர்கள் எல்லாம் உண்மையிலேயே இருந்தவர்கள் தானே என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.  சேரன் செங்குட்டுவனின் தம்பி தான் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் எனப் பலரும் இன்றும் நம்புகின்றனர் . செங்குட்டுவனின் காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டு என நம்புபவர்களும் உண்டு .ஆனால் உண்மையில் சேரன் செங்குட்டுவனின் காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. பல்வேறு உலக நாகரிகங்களுக்கு மத்தியில் தமிழக வரலாறும் செழு